தேநீரை ஊற்றும்போது மட்டுமல்ல; சில சமயம் காலியாக இருக்கும்போதும் கோப்பை நிரம்பி வழிகிறது. கோப்பையில் வெறுமையும் நிரம்பி வழிகிறது.
தேநீரோ, வெறுமையோ, கோப்பை நிரம்பி வழிவதைக் கண்டுகொண்டால், தேநீரைப் போல வெறுமையும் இனிக்கும்! வாழ்க்கையும் இனிக்கும்!
நிரம்பி வழிவதான உணர்வு இருந்தால் போதும்.
அப்படியான உணர்வில் எழுதப்பட்ட இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை உங்கள் ரசனை எனும் கோப்பையில் ஊற்றுகிறேன்.
சில சமயம் தேநீர்! சில சமயம் வெறுமை! கோப்பை நிரம்புவது நிற்பதில்லை!
- கோபாலி
'கிழக்கு வாசல் உதயம்' இதழில்
No comments:
Post a Comment